தடுக்கப்பட்ட மீனவர்கள்: தடுக்கப்பட்ட மோதல்
கொழும்பு:
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதைக் கண்டித்து இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையநூற்றுக்கணக்கான படகுகளில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்தியது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படை கைப்பற்றுவதையும்மீனவர்களைக் கைது செய்வதையும் கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் இலங்கைக்குச் செல்லும்போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி இலங்கையை நோக்கிப் புறப்பட்ட மீனவர்களை இந்தியக் கடற்படையும் கடலோரக் காவல் படையும்தடுத்து நிறுத்தியது. இதனால் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையுடன் நேரவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், போராட்டத்தை எதிர்கொள்ளஇலங்கைக் கடற்படை தயாராகவே இருந்தது. ஆனால், மீனவர்கள் இந்தியக் கடற்படையால்தடுக்கப்பட்டுவிட்டதால் போராட்டம் நடைபெறவில்லை என்று கூறினார்.