பாட்டீல் விவகாரம்: ஜெ. மீது பொதுநல வழக்கு
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்துஉச்ச நீதிமன்றத்தில் வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அப் பதவியில் நீடிக்கத் தடை விதித்துஉத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ஆளுநர் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தன்னுடன்தொலைபேசியில் பேசியதை பதிவு செய்து அதை உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்ஜெயலலிதா.
இது கடவுளின் பெயரால் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்திற்கு எதிரானது. இதன் மூலம்சத்தியப் பிரமாணத்தை மீறியுள்ள ஜெயலலிதா, மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுக்குகுந்தகம் ஏற்படுத்தியதோடு, அரசியல் சட்டத்தையும் மீறியுள்ளார்.
எனவே முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.
இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications