புதிய ஆளுநராக பர்னாலா இன்று பதவியேற்பு
சென்னை:
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா இன்று பதவி ஏற்கிறார்.
பர்னாலா ஏற்கெனவே 1989-91 திமுக ஆட்சியில் தமிழக ஆளுநராக இருந்தார். 1991-ல் திமுக அரசைக் கலைக்க அப்போதைய மத்தியஅரசு நிர்பந்தித்தபோது அதை அவர் ஏற்கவில்லை.
இருப்பினும் குடியரசுத் தலைவர் மூலமாக திமுக அரசை மத்திய அரசு கலைத்தது. இதனையடுத்து தமது பதவியை பர்னாலா ராஜிநாமாசெய்தார்.
இந் நிலையில் இப்போது இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலைஹைதராபாத்தில் இருந்து தமிழக அரசின் விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்புஅளிக்கப்படுகிறது.
பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், பர்னாலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.