பழனியில் ரோப் காரை தொடங்கி வைத்தார் ஜெ.
பழனி:
பழனி முருகன் கோவில் மலையில் நிறுவப்பட்டுள்ள ரோப் கார் வசதியை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் மலையில் ரோப் கார் வசதியைநிறுவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார் ஜெயலலிதா.
ரூ. 5 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக இன்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பழனி சென்றார் ஜெயலலிதா.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோப் கார் வசதியை ஜெயலலிதா தொடங்கி வைத்து மலை மேல்ரோப் கார் மூலம் பயணம் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ரோப் கார் மூலமாக கீழிறங்கி வந்தார். பின்னர்அவர் சென்னை கிளம்பினார்.
ரோப் கார் திட்டத்தின் கீழ் மொத்தம் 24 பெட்டிகள் இயக்கப்படவுள்ளன. ஒரு பெட்டியில் 4 பேர் அமரலாம். ஒருநாளைக்கு 12,000 பேர் ரோப் கார் மூலம் பயணிக்க முடியும். ரோப் காரின் பயண நேரம் 2.5 நிமிடங்களாகும்.












Click it and Unblock the Notifications