கல்விக்கு கடன்: தனி வாரியம் கோரும் ராமதாஸ்
சென்னை:
ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க தனிவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு காலியாக உள்ள சுமார் 37,000 இடங்களை நிரப்புவதற்கு ஒரு புதிய திட்டத்தைவகுக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாளை இதற்கான திட்டத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகஅரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதார்.
கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு திடீரென உயர்த்தியது.இதனால் 15% இட ஒதுக்கீடும் இல்லாமல் போய், கிராமப்புற மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப் போல பொறியியல்கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. அதோடு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
காலியிடங்களைக் குறைக்க ஒரே வழி கட்டணங்களை குறைப்பதுதான். மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம் கட்டண விகிதம் நியாயமான அடிப்படையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க அரசாங்கமே தனி வாரியங்களைஅமைத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வட்டியில்லாமலும், மற்றவர்களுக்கு எளிய வட்டி விகிதத்திலும் கல்விக் கடன்வழங்கி வருகிறார்கள்.
அதேபோல் தமிழக அரசும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க தனி வாரியம் அமைக்க முன்வர வேண்டும். அரசுநாளை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப் போகும் புதிய திட்டத்தில் இவையெல்லாம் இடம் பெறும் என்று ஏழை மாணவர்கள்எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.