சிங்கப்பூர்: இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இந்தியப் பணிப் பெண்ணை மிக பயங்கரமாகக் கொடுமைப்படுத்திய கனடா நாட்டைச் சேர்ந்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
அல்கா மண்ட்லோய் (43) என்ற கனடா நாட்டைச் சேர்ந்த பெண், துரோண ராய் (25) என்ற இந்திய பெண்ணை வீட்டுவேலைக்காக அமர்த்தினார். அல்கா சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்.
இவர் துரணோ ராயை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். வேக்வம் க்ளீனரின் குழாயை துரோண ராயின் வாயில் வைத்துஇயக்கியும், கத்திரிக் கோலால் கையை வெட்டியும், தலையை சுவரில் பலமாக மோத வைத்தும், நாற்காலியில் கட்டி வைத்துஅடித்தும், உதைத்தும் சித்ரவதை செய்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை துரோண ராயை 7 முறை இந்தக் கொடுமைகளுக்கு உள்ளானார்ராய்.
இதையடுத்து துரோணா ராய் சிங்கப்பூர் போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அல்காவை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று போலீஸார்கூறினர்.
2002ம் ஆண்டில்19 வயது இந்தோனேஷியப் பணிப் பெண்ணைத் தாக்கி கொலை செய்த, 47 வயது சிங்கப்பூர்வாசிக்கு 18ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படியும் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.