ஜெயலட்சுமி வழக்கில் மேலும் 3 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:-
ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்இளங்கோவனின் உறவினர்கள் சண்முகம், ரவிசங்கர், கார் டிரைவர் அழகர் ஆகியோரை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்துள்ளது.
இந்த மூவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் 3 பேரையும் ஜாமீனில் வெளிவிட நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக் கிழமையும் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன், ஏட்டு கண்ணன், நகைப்பட்டறை அதிபர் முருகவேல் ஆகியோர் கடந்தமாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications