வறுமையால் சாலை பணியாளர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
துரை அருகே கொடிய வறுமைக்கு சாலைப் பணியாளர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதையடுத்து பல சாலைப் பணியாளர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வறுமையில்வாடினர். 35 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந் நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற சாலைப் பணியாளர், வறுமை காரணமாகவிஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்று சிலமாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications