ஜெவுக்கு திமுக சிம்ம சொப்பனம்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுக சிம்ம சொப்பனமாக விளங்குவதாக அக் கட்சித் தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெட்ரோல் விலை உயர்வாக இருந்தாலும், அதிரடிப்படையினருக்குப் பாராட்டாக இருந்தாலும் திமுகவைக் குறைகூறுவதைஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் தொலைபேசியில் பேசியதை தலைமைச் செயலாளரிடமும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே கூறியதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அரசியல் சட்டத்தை அறியாமல் எதிர்க்கட்சிகளும்,பத்திரிக்கைகளும் குறை சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடும் சட்டத்தில், அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரிவிக்கப்பட்ட அல்லது என்னுடைய பரிசீலனைக்கு வந்தஎந்தவொரு விஷயத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்றும்கூறப்பட்டுள்ளது.
எனவே, இது ரகசியமானதல்ல என்றோ, தலைமைச் செயலாளருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும்தான் தெரிவித்தேன் என்றோகூறுவது தவறாகும்.
புதிய ஆளுநராக பர்னாலா பதவியேற்ற நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவில்தான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அதுவும்நிகழ்ச்சியில் 7-ம் வரிசையில் எனக்கு நாற்காலி போட்டிருந்தார்கள்.
எந்த ஆளுநர் வேண்டாம் என்பதில் திமுகவுக்கு அக்கறை இருந்ததில்லை. ஆனால் ஆளுநர் வாய்மை உடையவராக இருக்கவேண்டும் என்று திமுக விரும்புகிறது.
ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற திமுகவின் ஆரம்ப காலக் கருத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அப் பதவிஇருக்கும் வரையில் அப் பதவியில் அமருபவர்கள் பண்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்று திமுக கூறுவதில்முரண்பாடு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications