மீனாட்சி கோவில் அர்ச்சகரிடம் சிபிஐ விசாரணை
மதுரை:-
திருமங்கலம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமிக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணம் குறித்து திருமங்கலம் மீனாட்சிஅம்மன் கோவில் அர்ச்சகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ள ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜெயலட்சுமி கணக்கு வைத்திருந்த வங்கிகள், ஜெயலட்சுமியிடம் 10 நாள் விசாரணை, அவரது பெற்றோரிடம் விசாரணை, அவர்பாக்கி வைத்திருந்த தொலைபேசி நிறுவனங்களில் விசாரணை என சிபிஐ விரிவாகவே விசாரித்து வருகிறது.
இந் நிலையில் ஜெயலட்சுமி புகார் கூறிய காவல்துறை அதிகாரிகள் குறித்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள்தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக டி.எஸ்.பி. ராஜசேகருக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணம் நடந்தபோது உடன் இருந்ததாகக்கருதப்படும் ஒரு போலீஸ்காரரை சிபிஐ நேற்று நேரில் அழைத்து விசாரித்தது.
இதையடுத்து திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கிளைக் கோவிலுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அர்ச்சகர்சங்கரநாராயணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த அர்ச்சகர் முன்னிலையில், இந்தக் கோவிலில் தான் திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தனக்குத் தாலிகட்டியதாக சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி கூறியிருந்தார். இதையடுத்து இந்த விசாரணை நடந்தது.
சுமார் ஒரு மணிநேர விசாரணைக்குப் பின்னர் சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். விசாரணை குறித்த விவரங்களை சிபிஐஅதிகாரிகளும், அர்ச்சகரும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
திண்டுக்கல்லில் போலீசாரிடம் விசாரணை:
இதேபோல திண்டுக்கல்லில் ஜெயலட்சுமி தங்கியிருந்த வேதாத்திரி நகர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அங்குள்ள ஒருகந்துவட்டிக் கும்பலிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
டி.எஸ்.பி. ராஜசேகர் தான் ஜெயலட்சுமிக்கு வீடு பிடித்து திண்டுக்கல்லில் தங்க வைத்தார். அத்தோடு, தனது லஞ்சப் பணத்தைஜெயலட்சுமி மூூலம் கந்து வட்டிக் கும்பலிடம் தந்து வட்டிக்கு விட்டார்.
மேலும் ராஜசேகர் உத்தரவுப்படி ஜெயலட்சுமி வீட்டில் எடுபிடி வேலை பார்த்த போலீஸ்காரர்களான பாண்டி, வீரபாண்டி,சக்திவேல், பரமசாமி, நடராஜன் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்படியே ராஜசேகரின் மனைவிதற்கொலை தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.
-
மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா, அபய் குமார் சிங்.. ஆளுநர் ரவி முன்னிலையில் பதவியேற்பு! -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
R.N.Ravi: தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் சர்ச்சைகள்! 2021 - 2026 வரை நடந்தது என்ன? -
காமராஜர் ‘கே பிளான்’: திமுக வளர்ச்சியை தடுக்கவா? உட்கட்சி எதிரிகளை ஒடுக்கவா? -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
Population Census: தமிழகத்தில் ஜூலை 17 முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு! அரசிதழில் அறிவிப்பு -
கோவை, நீலகிரியில் விட்டு விளாச போகுது மழை! கொளுத்தும் வெயிலுக்கு வானிலை மையம் ”ஜில்” அப்டேட் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு











Click it and Unblock the Notifications