முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி பாமக மாநாடு
சென்னை:
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக விரைவில்மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
கல்வி மற்றும் பொருளாதார நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாக தேசிய மாதிரி சர்வே என்னும் அரசு அமைப்புசொல்கிறது. படித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 0.1 சதவீதம்தான் என்று அந்த சர்வே கூறுகிறது.
முஸ்லீம்களுக்கு எதுவும் தரக்கூடாது என்று சொல்லும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தோடு இருக்க வேண்டிய நிர்பந்தம்எங்களுக்கும் இருந்தது. பின்னர் அக்கூட்டத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். இனி அவர்களோடு ஒருபோதும் சேர மாட்டோம்.
எல்லா துறையிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நான்விவாதித்தேன். அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹமது படேலும் உடன் இருந்தார். இவ்விஷயம் குறித்துமீண்டும் சோனியா காந்தியிடம் பேசுவேன்.
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இட ஒதுக்கீடு மாநாடு நடைபெறும். மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர்பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்கள்தான். நம்மை யாரும் பிளவுபடுத்த முடியாது. இதை கடைசிவரை பாமக பின்பற்றும்.உங்கள் பிரச்சினைக்காக எப்போதும் குரல் நான் கொடுப்பேன் என்றார் ராமதாஸ்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications