போலீஸாருக்கு குறைந்த விலையில் பட்டாசு: ஜெ
சென்னை:
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையையொட்டி போலீஸாருக்கு மிகக் குறைந்த விலையில் பட்டாசுகளை விநியோகிக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்தப் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு பரிசுகள், பதக்கம், பாராட்டு விழா எனஜெயலலிதா கெளரவித்தார்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ளகாவல்துறையினருக்கு மலிவு விலையில் பட்டாசுகளை விற்பனை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி காவலர் கூட்டறவு பண்டக சாலை மூலம் காவலர்களுக்கு சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாகபட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
குறைந்தபட்ச விலையாக ரூ. 90 மற்றும் அதிகபட்ச விலையாக ரூ. 480 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணம்கொடுத்து வாங்க முடியாத காவலர்களுக்காக, சுலபத் தவணைத் திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்டதால் சந்தோஷமடைந்துள்ள தமிழக காவல்துறையினர் நரகாசுர வத நாளான தீபாவளியைமகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த பட்டாசு சலுகையை முதல்வர் அறிவித்துள்ளார்.