For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம்!

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரும் வெள்ளத்தில் தடுப்புக் கம்பிகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வட கிழக்குப் பருவ மழை தமிழகம்முழுவதும் படு தீவிரமாக உள்ளது. மாநலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அப் பகுதிகளையொட்டிய அருவிகளில் வெள்ளம்கொட்டுகிறது.

குறிப்பாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இதுவரை வரலாறு காணாத அளவுக்குநீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீரைப் பார்க்கவே அச்சமூட்டுவதாக உள்ளது.

மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்குமிடத்தில் இருந்த தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இதனால் குற்றால அருவிகளில் குளிக்க பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அருவிக்குஅருகே கூட செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீருடன், கற்களும் பெரும் வேகத்தில் வந்து விழுவதால் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

குற்றாலத்தில் இதுவரை இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்க ஏற்பட்டதில்லை என அவ்வூர்வாசிகளே கூறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X