தி.க- இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அடிதடி!
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திராவிடர் கழகத்தினருக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினருக்கும் இடையே அடிதடி நடந்தது.
ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதையடுத்து இந்து முன்னணியினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும்ஏராளமான அளவில் நீதிமன்ற வளாகத்தில் கூடினர். இதே போல திராவிடர் கழகத்தினர் சிலரும் கூடியிருந்தனர்.
விசாரணை நடந்து கொண்டிருந்த நீதிமன்ற அறைக்கு வெளியே அவர்கள் அளவில் கூடியிருந்தனர். ஏராளமான வழக்கறிஞர்களும் அங்குகூடி நின்றனர்.
இந் நிலையில் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு ஒத்திவைத்தவுடன் அரசுக்கு எதிராக இந்துமுன்னணியினர் கோஷமிட்டனர். இதையடுத்து திராவிடர் கழகத்தினர் சங்கராச்சாரியாருக்கு எதிராக கோஷமிட்டனர். வழக்கறிஞர்கள்நீதிபதியின் தீர்ப்பை வரவேற்றும் சங்கராச்சாரியாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் இந்து முன்னணியினருக்கும் திராவிடர் கழகத்தினரும் இடையே கைகலப்புஏற்பட்டது. தி.கிவினருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலரும் களத்தில் இறங்கி அடித்துக் கொண்டனர்.
இதில் 3 வழக்கறிஞர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்துவெளியேற்றினர். இந்து முன்னணியின் வட சென்னை தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.