சங்கராச்சாரியார்: சிவராஜ் பாட்டீலுடன் வாஜ்பாய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியாரைக் காப்பாற்ற பா.ஜ.க. தரப்பில் இருந்து உயர் மட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இன்று இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் பேசினார்.

அப்போது சங்கராச்சாரியின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்த வாஜ்பாய், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட கோரியதாகத்தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுடன் வாஜ்பாய் பேசியதை பா.ஜ.க. செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் நாத் சிங்உறுதிப்படுத்தினார். இந்தக் கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பால்தாக்கரே எதிர்ப்பு:

இந்தக் கைது குறித்து சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கூறுகையில்,

ஜெயேந்திரர் போன்ற பெரியவர்கள் இது போன்ற கொலையைச் செய்வாரா? நிச்சயம் இல்லை. இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்துக்காபாடுபட்டவர் அவர். காஷ்மீர், அயோத்தி பிரச்சனை தீர உழைத்தவர். தீபாவளி தினத்தன்று அவரைக் கைது செய்து இந்துக்களைஅவமானப்படுத்திவிட்டது தமிழக போலீஸ். அவர் வேறு எதற்காகவே பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்றார்.

ஜோஷி:

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், இந்தக் கைது இந்து சமூகத்தினருக்கேஅவமானம். இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+