இந்துக்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி: ஜீயர்
காஞ்சிபுரம் & கோவை:
இந்து சமுதாயத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காஞ்சிபுரம்அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெரிய மடாதிபதி. அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார் கொலைபோன்ற கீழ்தரமான செயலை செய்திருக்க மாட்டார். அவரை விரும்பாதவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால்மனசாட்சிப்படி அதை ஒப்புக் கொள்ள முடியாது.
இந்து சமுதாயத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்தத்திலேயே இது நடத்தப்பட்டிருக்கலாம். இது எனது கருத்து. அவரைவிசாரணைக்கு முன் கைது செய்திருக்கக் கூடாது. சாதாரண மனிதருக்கும் அவருக்கும் வித்தியாசம் உள்ளது.
அவர் சாட்சியங்களை கலைக்கக் கூடியவர் அல்ல. அவர் எங்கும் ஓடிப் போய்விட முடியாது. அவரை அவசரமாக கைது செய்யவேண்டிய அவசியமில்லை.
அவரது கைதிற்கு அரசியல் பின்னணியும் காரணமாக இருக்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அவர்விரும்பினார். இது சில அரசியல்வாதிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று அவர் கூறினார்.
கைதிகள் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி கோவை மத்திய சிறையில் 28 கைதிகள் இன்று ஒரு நாள்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications