For Quick Alerts
For Daily Alerts
Just In
சங்கர மடத்தை அரசு காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி
சென்னை:
பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: மாலுமி சரியில்லை என்பதற்காக கப்பலை கவிழ்த்து விட முடியாது. வேறு நல்லமாலுமியைத்தான் தேட வேண்டும்.
அதுபோலவே, ஆதி சங்கரர் நிறுவிய காஞ்சி சங்கர மடத்தை அழிந்து போக அனுமதிக்க முடியாது. சங்கர மடத்தின் உயரியநோக்கம், லட்சியத்தை கட்டிக் காப்பதற்காக, தமிழக அரசும், இந்து அறநிலைய வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்துமடத்தைக் காக்க முயல வேண்டும்.
சங்கர மடத்தின் கோட்பாடுகளுக்கும், திமுகவுக்கும் எந்த உடன்பாடும் இல்லை என்றாலும் கூட, மக்களுக்கு பயனளிக்கக் கூடியபல செயல்களை சங்கர மடம் செய்து வருகிறது. அதை யாராலும் விமர்சிக்க முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Comments
Story first published: Sunday, November 14, 2004, 5:30 [IST]