For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 அடியை தொட்டது மேட்டூர்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 100 அடியைத் தொட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல நீர்வரத்து இல்லை. இதனால் அடிமட்ட அளவுக்கே நீர்மட்டம் இருந்துவந்தது. பருவ மழை பொய்த்ததும், கர்நாடக அரசு தமிழகத்துக்குரிய நீரை தராததுமே இதற்குக் காரணம்.

இந் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வலுவாக பெய்து வருகிறது. இதனால் மேட்டூர்அணைக்கு நல்ல நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 100 அடியைத்தொட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தொட்டது. அணைக்கு விநாடிக்கு 8,500 கன அடி நீர்வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து நன்றாக இருப்பதாலும், மழை பெய்து கொண்டிருப்பதாலும்அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 120 அடியாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X