நாளைக்குள் விடுவிக்க வேண்டும்: வி.ஹெச்.பி. கெடு
ஹரித்துவார், கோவை & பாண்டிச்சேரி:
ஜெயேந்திரரை நாளைக்குள் விடுவிக்காவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று இந்து அமைப்புகள்அறிவித்துள்ளன.
ஹரித்துவாரில் இன்று கூடிய வி.ஹெச்.பி., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மத அமைப்புகளின் தலைவர்கள், ஜெயேந்திரரைநாளைக்குள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு விடுவிக்கவில்லையென்றால்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
கருப்பு பேட்ஜ் போராட்டம்:
இந் நிலையில், அகில இந்திய பிராமணர் சங்க தலைவர் டாக்டர்.வி.பி. புத்துராமன், காஞ்சி சங்கரமடத்தை காப்பது ஒவ்வொருஇந்துவின் கடமையாகும் என்றும் வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் இந்த கைது நடவடிக்கைக்குஎதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பந்த்துக்கு சிவசேனா அழைப்பு
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாண்டிச்சேரி மாநில சிவசேனா அமைப்பின் சார்பில் 12 மணி நேர பந்த்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த பந்த் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சிவசேனா தலைவர் ராம் விஸ்வலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த பந்த்தில் அனைத்து இந்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். ஜெயேந்திரருக்கு ஆதரவான நமது நிலையைஒற்றுமையுடன் வெளிக்காட்ட வேண்டும்.
சிறுபான்மையினரை கவருவதற்காக பெரும்பான்மை சமூகத்தின் முக்கியத் தலைவரை அவமதித்து விட்டது தமிழக அரசு என்றுகூறியுள்ளார்.
சர்வதேச சதி: விநாயகர் முரளி
இந் நிலையில், ஜெயேந்திரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சதி நடப்பதாகவும், மடத்தின் சொத்துக்களைகைப்பற்ற முயலும் சிலர் தீட்டிய சதியில் ஜெயேந்திரர் சிக்கியுள்ளார் என்றும் காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையின்அமைப்பாளர் விநாயகர் முரளி நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications