தமிழிசை கற்று கொடுங்கள்: ராமதாஸ்
சேலம்:
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழிசை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாமகநிறுவனரும், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமான ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழிசை விழா நடந்தது. விழாவைத் தொடங்கி வைத்து அவர்பேசுகையில், உலகில் முதலில் தோன்றிய இசை தமிழிசைதான். ஆனால் இன்று எங்கே இருக்கிறது தமிழிசை என்று தேடும்அளவுக்கு அதன் நிலை மோசமாகி விட்டது.
சுயமரியாதையோடும், மானத்தோடும் தமிழிசை சிறந்து விளங்க வேண்டும். இதற்காகத்தான் பொங்கு தமிழ் பண்ணிசைப்பெருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
தமிழிசையை மீட்க பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் முன்வர வேண்டும். இந்தஇயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளுக்கு தமிழிசையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கிராமங்கள்தோறும் தமிழிசைப்பள்ளிகள் நிறுவப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் அறக்கட்டளை ஈடுபடும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications