தமிழகத்தில் நாளை ரம்ஜான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜியார் சலாஹுதின் முகம்மது அயூப்மற்றும் ஷியா தலைமை காஜியார் குலாம் முகம்மது மெஹதி கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள தனித்தனி அறிக்கையில், ஷவ்வால் மாதத் தொடக்கத்திற்கான பிறை சனிக்கிழமைதென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் பண்டிகைகொண்டாடப்படுகிறது.
ஆளுநர் வாழ்த்து: ரம்ஜான் பண்டிகையொட்டி தமிழக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதரத்துவத்தைஉயர்ந்தோங்கச் செய்ய இந்த நன்னாள் உதவட்டும். அமைதி, ஒற்றுமை தழைத்தோங்கட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications