உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை வரைக்கும் ஒத்திவைத்து விட்டதால்,உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோர ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது.
கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது 2 நாட்கள் விசாரணை நடந்தது. விசாரணையின்போது ஜெயேந்திரருக்காக பிரபல கிரிமினல் வழக்கறிஞர்ராம்ஜேத்மலானி ஆஜரானார். இரு நாள் விவாதங்களுக்குப் பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்குஒத்திவைத்து நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற முயற்சிக்கப் போவதாக ஜெயேந்திரர் தரப்பு தெரிவிக்கிறது. இதற்காகசென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளைராம்ஜேத்மலானியின் வழக்கறிஞர்கள் செய்து வருகிறார்கள்.
இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications