இலங்கை- அமைதி பேச்சு: நார்வே முயற்சி தோல்வி
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நார்வேமேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.
தடைபட்டுப் போன அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க நார்வே அரசு முயற்சி எடுத்தது. விடுதலைப் புலிகளின்அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்துடன் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் பேச்சு நடத்தினார்.
இடைக்கால சுயாட்சி அதிகார அமைக்கும் திட்டம் பேச்சுவார்த்தையில் இடம்பெறவேண்டும் என நார்வே பிரதிநிதிகளிடம்புலிகள் வலியுறுத்தினர். ஆனால் இறுதி ஒப்பந்தத்தில் அத் திட்டம் குறித்து சேர்த்துக் கொள்ளலாம் என்று இலங்கை அரசுயோசனை கூறியது. அதை புலிகள் அமைப்பு நிராகரித்தது.
இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நார்வே முயற்சி தோல்வியடைந்தது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ரகசிய திட்டம் ஒன்றை அரசிடம் விடுதலைப் புலிகள் அளித்துள்ளனர். அத்திட்டத்தில் உள்ள விவரங்கள் குறித்து செய்தி ஏதும் வெளியிடப்படவில்லை.
புதிய யோசனையை தெரிவித்திருப்பினும், சுயாட்சி அதிகாரம் குறித்த தனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புலிகள்தெளிவுபடுத்தியுள்ளனர்.
புலிகளின் புதிய யோசனை குறித்து தமது நிலையை அடுத்த சில தினங்களில் அரசு அறிவிக்கும் என்று அரசின் சண்டே அப்சர்வர்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தான் மேற்கொண்டுள்ள அமைதி முயற்சி குறித்து இந்தியாவிடம் விளக்க எரிக் சோல்ஹைம் டெல்லி சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications