புதிய மடாதிபதி தேர்வா?: காஞ்சி மடம் மறுப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்திற்கு இன்னொரு இளைய சுவாமியை தேர்வு செய்யும் திட்டம் இல்லை என்று சங்கர மடம் திட்டவட்டமாகதெரிவித்துள்ளது. மேலும், இளைய சாமியார் விஜயேந்திரர் சங்கர மடத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்பார் என்றதகவலையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சி சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் கூறுகையில், இப்போது அதற்கு என்ன அவசியம் வந்து விட்டது?ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி சங்கர மடத்தில் தொடர்ந்து ஆச்சார்யர்களாக விளங்குகின்றனர். ஜெயேந்திரரைபோலீஸார் கைது செய்துள்ளனர், அவ்வளவுதான், அவரைத் தண்டித்து விட்டார்களா என்ன?
மடத்திற்கு புதிய சுவாமிகளைத் தேர்வு செய்யும் திட்டமே இல்லை. மட நிர்வாகம் சிறந்த முறையில், வழக்கம் போல நடந்துவருகிறது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஜெயேந்திரர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நாடப் போவதில்லை. அதை ஜெயேந்திரரும் விரும்பவில்லை.சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கையை எடுங்கள் என்றுதான் ஜெயேந்திரரும் கூறியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் மீது எங்களுக்குநம்பிக்கை உள்ளது.
விஜயேந்திரர் டிசம்பர் 16ம் தேதி வரை மகபூப் நகரில்தான் தங்கியிருப்பார். தொடர்ந்து அங்கு அவர் யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு வைத்து வருகிறோம். அவரை போலீஸார் விசாரித்ததாககூறப்படுவது தவறான தகவல் என்றார் சுந்தரேச அய்யர்.












Click it and Unblock the Notifications