ஜெயேந்திரர்: நீதிபதியை மாற்ற ராமதாஸ் கோரிக்கை
சேலம்:
சங்கராச்சாரியார் கைது பிரச்சினையை இந்துத்வா அமைப்புகள் திசை திருப்ப முயற்சிக்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது தொடர்பாக பெரும் சர்ச்சையைக் கிளப்புவது தேவையற்றது. ஏனெனில் அவர் கைது செய்யப்பட்டது கொலைவழக்கில்தான். தீவிரமாக விசாரணை நடத்தி, நம்பத்தகுத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
யாரையும் திருப்திபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விரிவானஅறிக்கை வெளியிட வேண்டும். அதுவே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
அகில இந்திய அளவில் பல்வேறு இந்துத்வா இந்தப் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றன. எனவே நிலையைத்தெளிவுபடுத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
ஜெயேந்திரர் மதிக்கப்பட வேண்டிய பொறுப்பில் இருப்பவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகடுமையானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜெயேந்திரரை தனி பங்களாவில் காவல் வைக்கலாம், எந்த பங்களா என்று அரசிடம் கேட்டுச் சொல்லுங்கள், நீதிபதிகள்குடியிருப்பில்கூட நிறைய பங்களாக்கள் காலியாக இருக்கின்றன. அரசின் கருத்தை அறியும்வரை ஜெயேந்திரரை சிறையில்அடைக்க வேண்டாம் என்று நீதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயேந்திரரின் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரிதந்திகள் வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நீதிபதியே தெரிவித்துள்ளார். இக் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் என்று ராமதாஸ்கூறினார்.












Click it and Unblock the Notifications