புதுவையில் பிசுபிசுத்து போன சிவசேனா பந்த்
சென்னை:
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் சிவசேனா கட்சியால் நடத்தப்பட்ட பந்த் தோல்வியடைந்தது.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து புதுவையில் சிவசேனா கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் இந்தபந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
கடைகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன. வாகனப் போக்குவரத்தும் தடையின்றி நடந்தது.
கேரளாவில் பாதிப்பு:
ஆனால் இதே காரணத்திற்காக கேரளாவில் வி.ஹெச்.பி. நடத்திய பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பெருமளவில்பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூழ்கியிருந்தன. பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
சென்னையில் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே காமகோடி பீட பக்தர்களைத் திரட்டி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று மாபெரும்ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் காமகோடி பீட பக்தர்கள்அனைவரும் ஒன்று திரண்டு இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு திரள வேண்டும்.
அங்கு ஜெயேந்திரர் கைதைக் கண்டித்தும், அவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைக் கண்டித்தும் மாபெரும் போராட்டம்நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் சமூகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications