For Daily Alerts
Just In
சிபிஐ விசாரணைக்கு விஜயேந்திரர் கோரிக்கை
ஹைதராபாத்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காஞ்சி மடத்தின்இளைய மடாதிபதி விஜயேந்திரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மகபூப் நகரில் இருக்கும் விஜேயந்திரர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்குஎழுதிய கடிதத்தில்,
மத்திய புலனாய்வுத் துறை மட்டுமே இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட முடியும். காஞ்சி சங்கரமடத்தின் கிளைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால் மத்திய அரசைச் சேர்ந்த அமைப்பே இது குறித்து விசாரிக்க இயலும்.எனவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இத் தகவலை முன்னாள் பாஜக எம்.பி. ஜிதேந்தர் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments
arrest karunanidhi chennai tamil nadu ramdoss news hosur kanchi sankarachariyar sankara raman bail petition effigies
Story first published: Monday, November 15, 2004, 5:30 [IST]