ஆவி பயம்: குடும்பமே தற்கொலை
திண்டுக்கல்:
மனைவி, 2 மகன்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ரஜினி ரசிகரான தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் பழனிவேலு (38). தையல் தொழிலாளியான இவரதுமனைவி ராமுத்தாய் (28). இவர்களது முதல் மகனின் பெயர் படையப்பா (6), இரண்டாவது மகன் சதீஷ் (4).
கடந்த இரு வாரங்களாக மனைவி, மகன்கள் அம்மை நோய் தாக்கி அவதியுற்றுள்ளனர்.
இந் நிலையில் மனைவி, மகன்களுக்கு பூச்சி மருந்தைக் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார் பழனிவேலு. இதில் நால்வருமேபலியாயினர்.
அவர்களுக்கு அருகே ஒரு ஆடியோ கேசட் கிடந்தது. அதில் பேசியுள்ள பழனிவேலு, தினமும் இரவில் என்னுடன் பேசும் ஆவி,என்னுடன் வந்துவிடு என்று அழைத்துக் கொண்டே இருந்தது. என்னை ஆவி கொன்றுவிடும் என்ற பயமாக உள்ளது. இதனால்குடும்பத்துடன் தற்கொலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது பழனிவேலின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவி பயத்தில் தனது குடும்பத்தையே காலி செய்துவிட்டரஜினி ரசிகரால் அப் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.