அமெரிக்கா: புதிய வெளியுறவு அமைச்சர் ரைஸ்
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து காலின் பாவல் விலகினார். இதையடுத்து அப் பதவியில்காண்டலீஸ்ஸா ரைஸை நியமிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முடிவு செய்துள்ளார்.
குவைத்தை இராக் ஆக்கிரமித்தபோது இராக்குக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவக் கூட்டுப் படைத்தலைவரான காலின் பாவல், இம்முறை இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை எதிர்த்தார்.
இதனால் புஷ்சுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனாலும், அமைச்சரவையில் அவர்தொடர்ந்தார். இந் நிலையில் அதிபர் தேர்தலில் புஷ் மீண்டும் வெற்றி பெற்றார்.
தேர்தலில் புஷ்ஷின் தோல்விக்கு தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நெருக்கடியான நேரத்தில், கருத்துவேறுபாடு இருந்தாலும் கூட பாவல் தொடர்ந்து பதவியில் இருந்ததாகவும் இப்போது புஷ் வென்றுவிட்டதையடுத்து பதவியைராஜினாமா செய்ததாகவும் தெரிகிறது.
இதற்கு நன்றிக் கடனாக அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு காலின் பாவலின் பெயரை புஷ்பரிந்துரை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் பாவலுக்குப் பதிலாக ஜார்ஜ் புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகரான காண்டலீஸ்ஸா ரைஸ் புதிய வெளியுறவுத்துறைஅமைச்சராவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராக், வட கொரியா, இரான், பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் முக்கியமுடிவுகள் எடுக்க புஷ்சுக்கு உறுதுணையாக இருப்பவர் ரைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.