பணம்: போலீசிடம் கோபப்பட்ட ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்டி சங்கராச்சாரியாரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணைநடத்தியபோது, அவர் கடும் கோபமடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து ஜெயேந்திரரிடம் கடந்த 3 நாட்களாக போலீஸ் விசாரணைநடைபெற்றது. 3வது நாள் விசாரணையின்போது, கொலையாளிகளுக்குப் பணம் வழங்கப்பட்டது தொடர்பான கேள்விகளைபோலீஸார் கேட்டனர்.
பல கேள்விகளுக்கு ஜெயேந்திரர் பதிலே அளிக்கவில்லை, மாறாக கோபமடைந்தார். பற்களை நறநறவென கடித்துக் கொண்டுமிகவும் உக்கிரமான பார்வையை காவல்துறை அதிகாரிகளிடம் அவர் வீசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கொலையாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் போலீஸ் அதிகாரிகள் ஜெயேந்திரரிடம் காட்டியுள்ளனர்.அதற்கும் கோபத்தையே பதிலாக காட்டியுள்ளார் ஜெயேந்திரர் என்கிறது காவல்துறை வட்டாரம்.












Click it and Unblock the Notifications