மன்னார்குடி மாபியா தான் காரணம்: எச். ராஜா
சென்னை:
சங்கராச்சாரியார் கைதுக்கு மன்னார்குடி மாபியா (சசிகலா அண்ட் கோ) தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ. எச் ராஜாகூறியுள்ளார்.
பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்களின் துரோகி ஜெயலலிதா. சங்கராச்சாரியார் கைதுக்கு தமிழ்நாடுமருத்துவமனையை சங்கர மடம் வாங்கியது தான் காரணம்.
இதை மன்னார்குடி மாபியா (சசிகலா குடும்பத்தினருக்கு இந்த நாமகரணத்தை முதலில் சூட்டியது சுப்பிரமணியம் சுவாமி தான்)வளைக்கப் பார்த்தது. முடியாமல் போனதால் சங்கராச்சாரியாரை கைது செய்துள்ளார்கள்.
நம்மை நடுக்கடலில் நிற்க வைத்து கழுத்தை அறுத்த துரோகி தான் ஜெயலலிதா என்றார்.
ஜோஷியிடம் திடுக் தகவல்:
போயஸ் தோட்டத்தில் ஆளுமை செலுத்தும் அந்த முக்கியமான குடும்பத்தினர், பெரும் தொகை ஒன்றை சங்கர மடத்தின் டிரஸ்ட்கணக்கில் பதுக்கி வைத்திருக்கச் சொன்னதாகவும், அதை சங்கராச்சாரியார் ஏற்க மறுத்ததால் தான் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தலைவர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி தெரிவித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
ஜோஷியை சந்தித்த சங்கரச்சரியார் தரப்பினர் இந்தத் தகவலைச் சொன்னதாகத் தெரிகிறது. மேலும் இது குறித்துசங்கராச்சாரியாரை வேலூர் சிறையில் சந்தித்தபோதும் ஜோஷி கேட்டு, மேலும் விவரம் திரட்டியிருக்கிறார்.
மடத்துக்கு வருமான வரி விலக்கு இருப்பதால், இதில் பதுக்கப்படும் பணம் வெளியுலகுக்குத் தெரியவராது. இதையேகாரணமாக வைத்து அந்த சக்தி வாய்ந்த குடும்பத்தினர் பெரும் தொகையை சங்கர மட கணக்கில் பதுக்க முடியன்றதாகக்கூறப்படுகிறது.
இந்த விவரங்கள் திமுக தலைவர் கருணாநிதியையும் எட்டியிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் இந்தக் கைதின் உண்மைப்பின்னணி குறித்து சந்தேகம் எழுப்பி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் கருணாநிதி என்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications