கொலையாளி அனிலுக்கு 2 நாள் போலீஸ் காவல்
காஞ்சிபுரம்:
சங்கரராமனைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவனான அனில் என்பவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் அனுப்பகாஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட அனில் குமாரை எஸ்.பி. சக்திவேல் இன்று காஞ்சி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜாவிடம்ஆஜர்படுத்தினார்.
அப்போது பேசிய எஸ்.பி, கொலையாளிகளுக்கு வாகனங்களைத் தந்து நேரடியாக உதவியவன் இந்த அனில். இவனிடம் நிறையவிசாரணை நடத்தவேண்டியிருப்பதால் அவனை 5 நாள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தமராஜா, அனிலை இரண்டு நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி அளித்தார். நாளை மாலை 5.30 மணிக்கு அவனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
முன்னதாக போலீஸ் காவலில் செல்ல ஆட்சேபம் இருக்கிறதா என்றும், உடலில் காயம் இருக்கிறதா என்றும் நீதிபதிஅனில்குமாரிடம் கேட்டார். அதற்கு இல்லை என்று பதில் அளித்தான்.












Click it and Unblock the Notifications