ஜெயேந்திரருக்கு சாதகமாக பேசவில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரருக்கு சாதகமாகவோ அல்லது வழக்குக்குப் பாதகமாகவே நான் எதுவும் பேசவில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜெயேந்திரரை கைது செய்தது தவறான நடவடிக்கை அல்ல என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன். அதை மாற்றம் செய்துபின்னர், கைது செய்தது தவறு என்று நான் கூறவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டு யாராக இருந்தாலும், அவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்குஎவ்விதமான அபிப்பிராய பேதமும் கிடையாது என்றுதான் கூறியிருக்கிறேன்.

பாஜகவினர் தண்டிக்கப்படவே கூடாது என்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தீர்ப்பு நீதி தேவன் கையில்இருக்கிறது என்றுதான் காஞ்சி கொலை வழக்கு குறித்து நிருபர்களிடம் இதுவரை கூறியிருக்கிறேன்.

ஆனால், ஜெயேந்திரர் கைது குறித்து புலன் விசாரணை பத்திரிக்கைகளில் வந்திருக்கும் பல விஷயங்களை அலட்சியப்படுத்தமுடியாது என்று நான் சொன்னதாலேயே ஜெயேந்திரருக்கு சாதகமாகவோ, வழக்குக்குப் பாதகமாகவோ சொன்னதாக அர்த்தம்இல்லை.

என் கருத்தை ஒரு சில பத்திரிக்கைகள் தவறாகவோ அல்லது சென்சார் செய்தோ வெளியிட்டுள்ளன. அதற்கு நானோ, திராவிடமுன்னேற்றக் கழகமோ பொறுப்பாளி அல்ல என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+