ஜெயேந்திரர் கைது குறித்து நாடாளுமன்றம் விவாதம்
சென்னை & மதுரை::
ஜெயேந்திரர் கைது குறித்து மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.
இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அமைதியாக நடைபெறும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக ஒவ்வொரு அரசியல்கட்சித் தலைவரும் என்னிடம் உறுதிமொழி அளித்துள்ளனர்.
விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச மக்களவையில் அனுமதி அளிக்கப்படும். ஜெயேந்திரர் கைதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
மத்திய அரசு தலையிட ராஜா கோரிக்கை:
இதறிகிடையே இன்று மதுரையில் நிருபர்களிடம் பேசிய பாஜாகவின் தமிழ் மாநில செயலாளர் எச்.ராஜா,
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜ் முன்பாக கூலிப்படையைச் சேர்ந்த கதிரவன் தனதுவாக்குமூலத்தை மாற்றிக் கூறியுள்ளார். போலீஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர் என்கிறார்.
இந்த திடீர் திருப்பத்திற்குப் பின்னரும் மத்திய அரசு இந்த வழக்கில் மெளனமாக இருக்கக்கூடாது. இதில் உடனடியாகத்தலையிட்டு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications