For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன் குடும்பத்தினர் ரகசிய வாக்குமூலம்?

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சங்கரராமனின் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரதராஜபெருமாள் கோவில் மேலாளராக இருந்து வந்த சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்ட பிறகு வழக்கு சூடு பிடித்துள்ளது.

ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸாரால் தீவிர விசாரணைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள கூலிப்படைத் தலைவன் அப்பு, கொலைக்கு பண உதவி செய்த காண்ட்ராக்டர்ரவி சுப்பிரமணியம் ஆகியோரைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இதுவரை கதிரவன் மற்றும் சின்னா என்ற ரஜினி ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டுபின்னர் பல்டி அடித்துள்ளனர்.

இந் நிலையில் சங்கரராமனின் குடும்பத்தினர் மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகள் 16 பேர் கடந்த 2 நாட்களாக ரகசிய வாக்குமூலம்அளித்து வருவதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்ற வளாகத்தில் பூட்டப்பட்ட அறைக்குள் அவர்களிடம் ரகசியமாக வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X