வாஷிங்டன் இந்திய தூதரகம் முன் தர்ணா நடத்த திட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

சங்கராச்சாரியாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள இந்து, ஜெயின் மதக் கோவில்கள்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனென் சென்னிடம் அந்த அமைப்பு மனு அளித்துள்ளது. இதே போன்றமனுக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்,நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

சங்கராச்சாரியாரைக் கைது செய்த விதமும், அவர் நடத்தப்படும் விதமும் எரிச்சலூட்டும் விதத்தில் உள்ளது. அவரை உடனடியாகவிடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களாகிய நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.

இந்தக் கைதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் அடுத்த வாரத்தில் அமைதியாக போராட்டமும்நடத்தப்படும். சங்கராச்சாரியாரை உடனடியாக விடுவித்து, பாதிக்கப்பட்ட மடத்தின் செயல்பாடுகளை மீண்டும் சீர்செய்யவேண்டும்.

சங்கரராமன் கொலை குறித்து நேர்மையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக்குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+