அனுமதி மறுக்கப்பட்ட வாழப்பாடியார் மகன்
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க வந்த மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திமகனும், பாஜக இளைஞர் அணியின் தேசிய செயலாளருமான வாழப்பாடி ராமசுகந்தனுக்கு சிறை நிர்வாகம் அனுமதிமறுத்துவிட்டது.
வேலூர் சிறைக்கு வந்த ராமசுகந்தனை ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி மறுத்து அவரை உள்ளே விட சிறைக் காவலர்கள் தடுத்துநிறுத்தினர்.
இதனால் சுமார் 5 மணி நேரம் சிறை வாசலிலேயே காத்திருந்தார் ராமசுகந்தன். ஆனாலும் போலீசார் அனுமதிக்கவில்லை.இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ராம சுகந்தன் பேசுகையில், ஜெயேந்திரரை பழிவாங்கவும், உள்நோக்கத்துடனும் தான் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது.
பண்ருட்டியில் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் அவரது கட்சியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலைவழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதிலிருந்தே இந்த அரசு உண்மையாக செயல்படுவதில்லை என்பதுநிரூபணமாகிறது என்றார்.
ராம சுகந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட சென்னையில் வந்த வந்த உத்தரவே காரணம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications