வீரப்பன்: செந்தாமரைகண்ணனிடம் விசாரணை
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓவிடம் ஆஜராகி டிஐஜி செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.
இது குறித்த விசாரணையை தர்மபுரி மண்டல வளர்ச்சி அதிகாரி (ஆர்.டி.ஓ) பிரகாசம் நடத்தி வருகிறது.
இதில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, சகோதரிகள், மலைவாசிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் தரப்புவாத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் எண்கெளன்டரில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது. இதன்படி வீரப்பனைக்கொன்ற படையில் இடம் பெற்றிருந்த அப்போதைய டி. ஐ.ஜிக்களான செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் ஆகியோர் ஆஜராகிசாட்சியம் அளித்தனர்.
வீரப்பனைக் கொன்றபோது இவர்கள் அதிரடிப்படை எஸ்.பிக்களாக இருந்தனர். பின்னர் தமிழக அரசு வழங்கிய சிறப்பு பதவிஉயர்வால் டிஐஜிக்களாகியுள்ளனர்.
அதேபோல் டி.எஸ்.பியாக இருந்து இப்போது எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சின்னச்சாமியும் ஆஜராகி சாட்சியம்அளித்தார். நாளை அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.