அண்ணாமலை பல்கலை. டிச-3ல் திறப்பு
சிதம்பரம்:
போலீசார்- மாணவர்கள் மோதல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரும்டிசம்பர் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 21ம் தேதி வரலாறு காணாத வன்முறை மூண்டது. பல்கலைக்கழகமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பொறியியல் மாணவரான சிவசக்தி என்பவர் இறந்ததால் இந்த வன்முறை மூண்டது.
மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதலில் போலீஸ் தலையிட வாக்குவாதம், வன்முறையாக மாறியது.
ஆத்திரமடைந்த மாணவர்கள் இரவு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்துத் தாக்கினர்.
இதையடுத்து 22ம் தேதி முதல் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது. இந் நிலையில், டிசம்பர் 3ம் தேதி முதல்பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளும் 3ம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி நடக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.