சுந்தரேச அய்யரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடமும், கொல்லப்பட்ட சங்கரராமனின் மனைவி, மகளிடமும்போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. சங்கரமடத்தைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந் நிலையில் மடத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்து கொண்டு போலீசாரை அவ்வப்போது கண்டித்துப் பேசிவரும் சுந்தரேச அய்யரை திடீரென போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்அலுவலகத்திற்கு வரவழைத்தனர்.
தனி அறையில் வைத்து அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார் எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலானடீம்.
இதற்கு முன்பும் சுந்தரேச அய்யரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு முகத்தில் சிரிப்புடன்தான் வெளியே வருவார், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிவிட்டே மடத்திற்குக் கிளம்புவார்.
ஆனால் இம்முறை விசாரணை முடிந்து வெளியே வந்தபோது வெளிறிப் போய் இருந்தார். வியர்க்க விறுவிறுக்கவெளியே வந்த அவரது முகத்தில் வழக்கமான சிரிப்பைக் காணவில்லை.
கையில் வாட்டர் பாட்டிலோடு வெளியே வந்த அவர் வேகமாக மடத்திற்குச் சென்று விட்டார். நிருபர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டபோதும் பதிலே கூறாமல் போய்விட்டார்.
ஜெயேந்திரரும் கோபம்:
சுந்தரேச அய்யர் மீது சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாரும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 2 முறைவேலூர் சிறைக்குச் சென்ற சுந்தரேச அய்யரை அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.
இதுவரை ஜெயேந்திரர் கோஷ்டியில் இருந்த சுந்தரேச அய்யர், இப்போது விஜயேந்திரர் கோஷ்டிக்குமாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, உறவினர் கண்ணன், சங்கர மடத்தில் ஏட்டாக பணியாற்றிவந்த கண்ணன் ஆகியோரும் எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் பிரேம்குமார் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுவிட்டுத் திருப்பி அனுப்பினார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications