For Daily Alerts
Just In
குருமூர்த்திக்கு போலீஸ் சம்மன்!!
சென்னை:
சங்கராச்சாரியார் விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மடத்தின் தீவிர பக்தரான குருமூர்த்தி சங் பரிவாருக்கும், மடத்துக்கும் ஆதரவாக முன்னணி ஆங்கில நாளிதழில் கட்டுரைகள்எழுதி வருகிறார். சுதேசி ஜாக்ரன் மன்ஞ் என்ற ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு அமைப்பை நடத்தி வரும் அவர், ஜெயேந்திரர் கைதுதொடர்பாக போலீசாரை சந்தேகித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சங்கராச்சாரியார் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரிகளில் திமுக சார்பு போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகவும், போலீஸ்விசாரணை குறித்து பல்வேறு சந்தேகங்களையும் குருமூர்த்தி கிளப்பியிருந்தார்.
இதையடுத்து கடுப்பான போலீசார் அவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், இன்னும் குருமூர்த்திபோலீசில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, November 30, 2004, 5:30 [IST]