For Daily Alerts
Just In
பிராமணர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை & வேலூர்:
சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து சென்னையிலும் வேலூரில் பிராமணர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம், புரோகிரதர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்தஉண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் பேசியவர்கள், உடனே சங்கராச்சாரியாரைவிடுதலை செய்ய வேண்டும் என்றனர். இநத்ப் போராட்டத்துக்கு பிராணர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன் தலைமைதாங்கினார்.
பொய் வழக்கு போடாதே, காஞ்சி மடத்தின் புனிதம் காப்போம், இந்துக்களே ஒன்று படுங்கள் என கோஷங்களும் எழுப்பினர்.
சங்ராச்சாரியார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேலூரில் பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்போராட்டம் நடந்தது.
Story first published: Tuesday, November 30, 2004, 5:30 [IST]