மேலும் 2 வழக்குகளில் சங்கராச்சாரியார் கைது?
சென்னை:
அனுராதா ரமணனிடம் தவறான நடந்து கொண்ட வழக்கிலும், திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும்சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஜெயேந்திரருக்கு எதிராக அனுராதா ரமணனிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டது போலீஸ்.
மேலும் அவரிடம் இருந்து புகார் ஒன்றைப் பெற்று அதை வழக்காகப் பதிவு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. அப்படிவழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்படலாம்.
இதே போல வைணவ திருத்தல பாதுகாப்புப் பேரவையின் அமைப்பாளர் திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும்ஜெயேந்திரரின் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது திருப்பதி உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் சைவ மடாதிபதியான ஜெயேந்திரர் சிலவிவகாரங்களில் தலையிட்டார். அப்போது ஜெயேந்திரருக்கு எதிராக தீவிரமாகக் குரல் தந்தவர் மாதவன்.
இந் நிலையில் இவர் அண்ணா சாலையில் வைத்து அரிவாள்களால் வெட்டப்பட்டார். தலை பிளந்த நிலையில் நீண்ட காலம்மருத்துவ சிகிச்சை பெற்று இப்போது தான் மீண்டும் நடமாடும் நிலைக்கு வந்துள்ளார்.
இந்த வழக்கிலும் சங்கராச்சாரியாரின் தொடர்புகள் குறித்த விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக போலீசார்கூறுகின்றனர்.
முதல் இரண்டு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் இந்த இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.