"காவிகளின் காலித்தனம்"...கி.வீரமணி கடும் தாக்கு
சென்னை:
காம வெறி பிடித்த காவிகளைக் கண்காணிக்க தனி போலீஸ் படையை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சங்கராச்சாரியார் யார் என்பதை இந்த உலகுக்கு வெளிப்படுத்துவதற்காக 1983ம் ஆண்டிலேயே ஒரு ஆதாரக் குவியல் மூலமாகநூல் வெளியிட்டோம். அது ஏதோ எங்களது தவறான ஆவல், அவசரம், ஆர்வம், ஆசையின் காரணமாகக் கொண்டுவரப்பட்டதல்ல.
யதார்த்தமான உண்மை நிலவரத்தையொட்டித்தான் அந்த நூலை திராவிடர் கழகம் வெளியிட்டது.
இப்போது தமிழக அரசின் காவல்துறை காஞ்சி சங்கராச்சாரியாரின் கிரிமினல் நடவடிக்கைகளை சரியான கோணத்தில் சென்றுஆய்வு நடத்தி வருவதால் புதைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நிற்கின்றன.
அரசு வழக்கறிஞராலும், பிரபல பெண் எழுத்தாளர் ஒருவராலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் காதால் கேட்க முடியாதஅளவுக்கு, நாகரீக உணர்வுள்ள யாருமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு உள்ளன.
இன்னும் கூட வெளியே வராத பல தகவல்கள், ஆமை, ஊமையாக்கப்பட்ட எத்தனையோ அனுராதா ரமணன்கள், அபலைகள்,வெட்கத்திற்கு அஞ்சி கூச்சப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் இந்தப் பட்டியலில் இருக்கக் கூடும்.
இதுபோல இப்போதெல்லாம் எங்கெங்கு காணினும் காவிகளின் காமலீலைகள். இந்தக் காவிகளின் காலித்தனத்தை கண்காணிக்கஒரு தனிப் போலீஸ் படையை அமைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
சங்கர மடத்தை மையமாகக் கொண்டு இந்த ஒழுக்கக் கேடுகள் நடந்துள்ளதால், மடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்துஜெயேந்திர சரஸ்வதியை விலகிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக அரசின் இந்து அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications