ராதாகிருஷ்ணனை தாக்கிய முக்கிய நபர் சிக்கினான்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது கொலை வெறித் தாக்குதலை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்அனந்தகுமார் என்பவன் போலீஸ் பிடிக்குள் வந்துவிட்டான்.
அவனை சில நாட்களுக்கு முன் வளைத்த போலீசார், கைதை வெளியில் காட்டாமல் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணைநடத்தினர். நேற்று அவனை சென்னை சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் அவனிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி மீண்டும் அவனை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அவனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தந்த நீதிபதி உமா மகேஸ்வரி, டிசம்பர் 3ம் தேதிக்குள் மீண்டும்அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, வேலையாளை அரிவாளால் வெட்டியதாக அனந்தகுமார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சந்திரசேகர கனபாடிகள் என்ற பெயரில் ராதாகிருஷ்ணன் தான் மொட்டை கடிதாசி போடுவதாக ஜெயேந்திரர் நினைத்ததாகவும்,இதனால் அவரைத் தாக்க உத்தரவிட்டதாகவும் போலீஸ் கூறுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தத் தாக்குதல் வழக்கை ஊறுகாய் ஜாடியில் ஊறப் போட்டிருந்த போலீசார் இப்போது தான்மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சங்கராச்சாரியாரையும் ஒரு குற்றவாளியாகச் சேர்த்து கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications