செக்ஸ் சதுர்வேதியின் ஜாமீன் மனு ஏற்பு
சென்னை:
போலிச் சாமியார் சதுர்வேதி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்திச் சென்று ஹைதராபாத்தில்வைத்து பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கிடைத்து வரும் விவரங்கள்பிரேமானந்தாவையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன.
இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை போலீசில் குவித்து வருகின்றனர்.
கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலுடன் பெண்களுடன் ராத்திரி நேரத்து பூஜைகள் நடத்தியிருக்கிறார் இந்தபிராடு சாமி. அந்த வேடம் போட்டுக் கொண்டு இவர் செய்ததாகக் கூறப்படும் எல்லை மீறல்கள் எல்லாமே அசிங்க ரகம் என்கிறது போலீஸ்.
சுவாமிகள் என்று நம்பி வந்த பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சீரழித்துள்ளார். அத்தோடு இவர் மீது ஓரினச் சேர்க்கைபுகார்களும் வந்துள்ளன.
ஜெயேந்திரரின் விஷயம் பெரிதாகிவிட்டதால் இவர் விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால், இவர் மீதான விசாரணைகள் அமைதியாக அதேநேரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சாமியார் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். ஆனால், இவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டதுநீதிமன்றம்.
இதையடுத்து இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்து விட்டார்கள். எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனு மீது நாளை மறு நாள் விசாரணைநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications