For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் சதுர்வேதியின் ஜாமீன் மனு ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலிச் சாமியார் சதுர்வேதி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்திச் சென்று ஹைதராபாத்தில்வைத்து பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கிடைத்து வரும் விவரங்கள்பிரேமானந்தாவையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை போலீசில் குவித்து வருகின்றனர்.

கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலுடன் பெண்களுடன் ராத்திரி நேரத்து பூஜைகள் நடத்தியிருக்கிறார் இந்தபிராடு சாமி. அந்த வேடம் போட்டுக் கொண்டு இவர் செய்ததாகக் கூறப்படும் எல்லை மீறல்கள் எல்லாமே அசிங்க ரகம் என்கிறது போலீஸ்.

சுவாமிகள் என்று நம்பி வந்த பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சீரழித்துள்ளார். அத்தோடு இவர் மீது ஓரினச் சேர்க்கைபுகார்களும் வந்துள்ளன.

ஜெயேந்திரரின் விஷயம் பெரிதாகிவிட்டதால் இவர் விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால், இவர் மீதான விசாரணைகள் அமைதியாக அதேநேரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சாமியார் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். ஆனால், இவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டதுநீதிமன்றம்.

இதையடுத்து இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்து விட்டார்கள். எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனு மீது நாளை மறு நாள் விசாரணைநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X