பெங்களூரில் மையம் தொடங்கும் மைக்ரோசாப்ட்
Subscribe to Oneindia Tamil
சியாட்டில்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் பெங்களூரில் தனது ஆராய்ச்சி மையத்தைத் திறக்கவுள்ளது.
பல்வேறு மொழிகளில் சாப்ட்வேர்களை எழுதுவது குறித்த ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடக்கும். 2005ம் ஆண்டு ஜனவரியில்இந்த மையம் செயல்படத் தொடங்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இது போன்ற பிற மொழி சாப்ட்வேர் குறித்த ஆராய்ச்சிக்காக பெய்ஜிங், கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட 6 இடங்களில் மைக்ரோசாப்ட்ஆய்வு மையங்களை நடத்தி வருகிறது. இப்போது இந்தியாவிலும் ஒரு மையம் தொடங்கப்படுகிறது.
பெங்களூர் ஆய்வு மையத்தின் தலைவராக பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெர்மொண்ட்டில் உள்ள மைக்ரோசாப்மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளராவார்.












Click it and Unblock the Notifications