பெண் கொலை: டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சென்னை:
சென்னை அண்ணாநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த அனிதா என்ற பெண்ணைப் படுகொலை செய்தவழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6 வருட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் கணவரின் கார் டிரைவராக இருந்தவர் அண்ணாமலை. பின்னர் அந்த வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்.
இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் அனிதா தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து போலீஸார்நடத்திய தீவிர விசாரணையில் அண்ணாமலை சிக்கினார்.
அவர் மீது சென்னை 4வது விரைவு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதில் இப்போது தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.
அனிதாவைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், அவரது வீட்டில் நகை, பணத்தைத் திருடியதற்காக 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி வி.கே.பாரதி தீர்ப்பளித்தார்.
இரு தண்டனைகளையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால், மொத்தமாக 20 ஆண்டுசிறைத் தண்டனையை அண்ணாமலை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications