தமிழகத்திற்கு ரூ. 9,100 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்திற்கு 2005-06ம் ஆண்டுக்கான மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு ரூ. 9,100 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 1,100 அதிகமாகும்.

2005-06ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுடன் முதல்வர்ஜெயலலிதா நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

அப்போது தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 9,100 கோடியை ஒதுக்க திட்டக் கமிஷன் முன் வந்தது. இந்த நிதி ஒதுக்கீடு குறித்துமுதல்வர் ஜெயலலிதா திருப்தி தெரிவித்துள்ளார்.

அலுவாலியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகம் கோரிய நிதியை திட்டக் கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை நான் மனம் உவந்து வரவேற்கிறேன். தமிழகத்தில் தொழில்வளர்ச்சி உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு பெரும் உதவியாக இருக்கும்என்றார்.

தமிழகத்தில் மின்சாரம் மற்றும் சாலை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கு மட்டும்மொத்தம் ரூ. 2,868.046 கோடி அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத் துறைக்கு ரூ. 1,362.38 கோடியும், சாலை வசதிகளுக்கு ரூ. 1,505.66 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இவை தவிர கல்வி, சுகாதாரம் மற்றும் சத்துணவு ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 3,687.64 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

விவசாயத் திட்டங்களுக்காக ரூ. 641.11 கோடியும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அலுவாலியாவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் குறிப்பாக சென்னை நாட்டிலேயே மிகமுக்கிய இடத்தை வகித்து வரும்போதும் அதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு எதையும் செய்வதில்லை என்றுமுதல்வர் குற்றம் சாட்டினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் தமிழகத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் அத்துறையின் மேம்பாட்டுக்காகதனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அலுவாலியாவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் உலகத் தரத்திலான சர்வதேச விமான நிலையமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேம்படுத்தவும் மத்திய அரசின்அனுமதியும், நிதியுதவிடும் வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

இக் கூட்டம் முடிந்த பின்னர் இரவிலேயே ஜெயலலிதா சென்னை திரும்பிவிட்டார். பிரதமர் உள்பட வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+