3 மாணவர்கள் சாவு: விரையும் போலீஸ் படைகள்

Subscribe to Oneindia Tamil

- நமது சிறப்புச் செய்தியாளர்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கர மட வேத பாடசாலையில் படித்து வந்த 2 கேரள மாணவர்களும் ஒரு ஆந்திர மாணவரும் மர்மமானசூழ்நிலையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த காஞ்சிபுரத்திலிருந்து 2 தனிப் படைகள் கேரள மாநிலம் காசர்கோடு மற்றும்ஆந்திர மாநிலத்திற்கு விரைகின்றன.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த கேசவனும் அவரது நண்பரும் 20 ஆண்டுகளுக்கு முன் சங்கர மட வேதபாடசாலையில் படித்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தனர்.

இதேபோல, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப சர்மா என்ற மாணவரும் மர்மமான முறையில் சங்கர மட வேத பாடசாலையில்இறந்துள்ளார். இந்த இரு மர்ம சாவுகள் குறித்தும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கூடுதல் டிஎஸ்பி சத்யநாராயணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பு, சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர்அடங்கிய தனிப் போலீஸ் படை காசர்கோடு விரையவுள்ளது.

இதேபோல இன்னொரு போலீஸ் படை ஆந்திரா விரைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+